2:

  • வெஃகாமை அதிகாரத்தில் அதிகாரத் தலைப்பையும் சேர்த்து 14 இடங்களில் ஆயுத எழுத்து இடம் பெற்றுள்ளது.
  • குறளில் உள்ள மொத்தச் சொற்கள் 11597. அவைகளில் 4888 வெவ்வேறானவை; இன்னொரு வகையில் சொல்வதானால், ஒரு சொல் சராசரியாக இரண்டுக்கு மேற்பட்ட தடவை குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • நூல் முழுமையும் ஐம்பது அல்லது அறுபது வடமொழிச் சொற்களே உள.
  • குறட்பா 1159 மட்டும் ஈற்றுச் சீரில் ஒரே ஒரு எழுத்தைக் கொண்ட 'தீ' என்னும் சொல்லுடன் முடிந்துள்ளது. அதுவும் அசைச் சொல்லாக இல்லாமல் பொருட்பெயராக அமைந்துள்ளது:
    தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
    விடிற்சுடல் ஆற்றுமோ தீ
  • தொடங்கிய சொற்களாலேயே முடித்திருப்பது இரண்டு பாக்கள்:
    1. நாடுஎன்ப நாடா வளத்தன நாடுஅல்ல
    நாட வளம்தரு நாடு
     (குறள் 739)
    2. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
    பொருளல்லது இல்லை பொருள்
     (குறள் 751)
  • முப்பால் எனவும் சொல்லப்படும் திருக்குறளில் அறம், பொருள், இன்பம் எனும் மூன்று சொற்களும் ஒரே பாடலில் இடம் பெற்றுள்ள குறள்:
    அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
    தீதின்றி வந்த பொருள்
     (குறள் 754)
  • பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு
     (குறள் 350)
    என்ற குறளில் ஒரே சொல் 6முறை இடம் பெற்றுள்ளது.
  • ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும், ஒரே சொல் 4முறை 22 குறட்பாக்களிலும், ஒரே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.
  • கடவுள் வாழ்த்து, கூடாஒழுக்கம், வினைத்தூய்மை, என்ற அதிகாரங்களில் எந்தப் பாடல்களிலும் அதிகாரப் பெயர் இடம் பெறவில்லை.
  • வெஃகாமை என்னும் அதிகாரம் ஒன்றில் மட்டுமே அதிகாரப் பெயரைச் சுட்டும் பெயர் அதிலுள்ள பத்துப் பாக்களிலும் பயின்று வந்துள்ளது.
  • 71, 110 ஆகிய அதிகாரங்கள் 'குறிப்பறிதல்' என்ற பெயரில் உள்ளன. எனவே 133 அதிகாரங்களுக்கு 132 பெயர்களே உள்ளன.

Comments

Popular posts from this blog

தமிழ் நாவல்கள் தரவிறக்கம் :

சக்கரை வேம்பு (SCOPARIA DULCIS)

அதியமான் ( சத்தியபுத்திரன் அதியன் )