Posts

தமிழ் நாவல்கள் தரவிறக்கம் :

இக்களஞ்சியம் ஓர் பொக்கிஷமாகவே பதியப்படுகின்றது. வியாபர நோக்கத்திற்கு இதனை பயன்படுத்த வேண்டாம் எழுத்தாளர் தமிழ்வாணன் அவர்களின் நாவல்களின் சிறு தொகுப்பு : https://drive.google.com/drive/folders/0B-WHJQf1fFONWkdJR1g2RW1iQTQ சுபா வின் நாவல்கள் : https://drive.google.com/drive/folders/0B-WHJQf1fFONclVQRFZyc3BOZVE பட்டுகோட்டை பிரபாகரின் நாவல்கள் இதோ உங்கள் கைகளில் : https://drive.google.com/drive/folders/0B-WHJQf1fFONSWFUR0VyNDNxcVE மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் சில ஒரே தொகுப்பாக இங்கு  : https://drive.google.com/drive/folders/0B-WHJQf1fFONZV9wcnZNTzlLaU0 இது வரை நான் தேடியதில் கிடைத்த மிக நேர்த்தியான தெளிவுடைய    மின்னூல்களின் இணைப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன . எழுத்தாளர் சாண்டில்யன்   அவர்களின் படைப்புகளில்   பிரபலமானவை மற்றும் பலராலும் தேடப்பட்டு வந்த   நாவல்கள் ஒரே இடத்தில் தரவிறக்கத்திற்கு ...... https://drive.google.com/drive/folders/0B-WHJQf1fFONX3JPU1VndmJVdnM க்ரைம் எழுத்தாளர் ராஜ...

அதியமான் ( சத்தியபுத்திரன் அதியன் )

Image
அதியமான் -   மரபினர் சங்ககாலத்தில் அதிகன் நாட்டை ஆண்டோர் ஆவர். இவர்கள் நாட்டின் தலைநகர்  தகடூர் . இது இன்றைய  தருமபுரி  ஆகும். இப்போது  அதியமான் கோட்டை  தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் (  வன்னியர் ) சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. அதியர் மரபினர் சேரரின் கிளைக்குடிகளாக இலக்கியச் சான்றுகள் மூலமும் தொல்லியல் சான்றுகளின் மூலமும் அறியப்படுகிறார்கள். அதற்கு ஆதாரமாக, பனம்பூ மாலை சேரருக்கே உரியதாயினும், அது அதியனின் முன்னோர்களைப் போல் அதியருக்கும் உரியதே என்றும், புறம் 99 இல் கூறப்பட்டுள்ளது. இது, சங்ககாலத்தில் அதியரும் சேரரும் ஒரே குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றது. [3] கி.பி.13 ஆம்  நூற்றாண்டில் அதியர் மரபைச் சேர்ந்த  விடுகாதழகிய பெருமாளின்  வேலூர் மாவட்டம் திருமலைக் கல்வெட்டில்  வஞ்சியர் குலபதி எழினி  என்றும்,  சேர வமிசத்து அதிகைமான் எழினி  என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவனப்பள்ளியில் கிடைத்த  விடுகாதழகிய பெருமாளின்  கல்வெட்டில்...

மண்புழு உரம் தயாரிப்பு

Image
கேள்வி: 1. மண்பழு உரம் தயாரிக்கவிரும்பும் விவசாயிகள் முதலில் என்ன செய்ய வேண்டும் ?  மண்புழு உரம் தயாரிப்பில் பல முறைகள் உள்ளன.  இதில் எந்த முறையில் செய்தால் செலவு குறையும் என்று பாருங்கள். கூடுமானவரை நம் கைவசம் உள்ள பொருட்களை பயன்படுத்துங்கள்  பக்கத்து கிராமங்களில் யாராவது மண்புழு உரம் தயார் செய்கிறார்களா? என்று பாருங்கள். அவர்களுடைய அனுபவங்களை கேட்டுக் கொள்ள வேண்டும். குவியல் முறை, தொட்டி முறை, பெட்டி முறை குழி முறை, மரத்தடியில் தயாரிக்கும் முறை, திறந்தவெளியில் தயாரிக்கும் முறை என்று அனைத்து முறைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். 2. மண்புழு தயாரிப்பில் என்னென்ன மண்புழு வகைகளை பயன்படுத்தலாம் ?  உலகம் முழுவதும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை 6000 வகை. இவை 20 குடும்பங்களைச் சேர்ந்தவை. இந்தியாவில் இருப்பவை மட்டும் 500 வகை. தமிழ்நாட்டில் அதிகம்  உர உற்பத்திக்காக வளர்க்கப்படுபவை சுமார்  மூன்று வகை. இந்திய மண்புழு, ஐரோப்பிய மண்புழு, மற்றும் ஆஃப்ரிக்க மண்புழு இந்திய மண்புழு  (PERIONYX EXCAVATUS) இது நம்ம ஊர் மண்புழு....

கருங்காலி மரம்

Image
கருங்காலி மரம்                                                   (சிலை வடிக்க சிறந்த மரம் ) (அழிந்து வரும் மரவகை என்று குறிக்கப்பட்டு  இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில் இதன் வியாபாரம் தடை செய்யப் பட்டுள்ளது) எபோனி மரச் சிலைகள் 1. மரத்தின் தமிழ்ப் பெயர் : கருங்காலி  (எபனி) 2. தாவரவியல் பெயர் :   DIOSPYROS EBONY 3. பொதுப் பெயர் / ஆங்கிலப் பெயர் :  எபனி (INDIAN EBONY) 4. தாவரக்குடும்பம் : எபனேசி (EBENACEAE) 5. மரத்தின் வகை :  வாணிப மரம் 6. மரத்தின் பயன்கள் : கர்நாடகாவின் எபெனிக் காடு  தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும்  கனி : பழச் சதை கொண்ட உண்ணும் கனி தரும் மரம்; சிறிய அளவு பெர்சிமான் பழம் பொல இருக்கும். மரம் : கருப்பு நிற மரம் கவர்ச்சிகரமானது; கடைசல் வேலைகளுக்கு உகந்தது: சிற்பங்கள் செதுக்கு வதற்கும், அழகிய வேலைப்பாடுகள் உள்ள மரச்சான்கள் செய்யவும், கிடார், பியானோ, கிளாரினெட் ஆகிய இசைக் கர...

சக்கரை வேம்பு (SCOPARIA DULCIS)

Image
சரக்கொத்தினி, கல்லுருக்கி என்றும் தமிழ் மூலிகை சக்கரை வேம்பு. சக்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், மஞ்சள் காமாலை, ஆஸ்துமா வயிற்று உபாதைகள், பாம்புக்கடி, பலவலி, மறு;சள் காமாலை, ஆகிய பெரிய நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்க பயன்படும் சிறு செடி இது. இந்தியாவில் நீரிழிவுக்கும், தைவானில் ரத்த அழுத்தத்திற்கும், பிரேசிலில் ரத்தப்போக்கு, ரத்த காயங்களுக்கும், நிகராகுவாவில் ரத்தச்சோகை மற்றும் தலைவலிக்கும் காலங்காலமாக் தங்களின் பாரம்பரிய வைத்திய முறைகளில் சக்கரை வேம்புவைப் பயன்படுத்துகிறார்கள்.  இதன் பொதுப் பெயர் ஸ்வீட் புரூம் வீட் (SWEET BROOM WEED);  ஸ்கோப்பேரியா டல்சிஸ் (SCOPARIA DULCIS) என்பது இதன் தாவரவியல் பெயர்; ஸ்குரோப்புலேரியேசியே (SCROPULARIACEAE) தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. தென் அமெரிக்கா உட்பட அமெரிக்காவின் வெப்ப மண்டலப்பகுதிகள் இதன் தாயகம்;. இதனை நியோ டிராப்பிக்ஸ் (NEO TROPICS). அமேசோனியா, கரிபியன், சென்ட்ரல் அமெரிக்கா, சென்ட்ரல் ஆண்டஸ், ஈஸ்டர்ன் சவுத் அமெரிக்கா, நார்தன் ஆண்டஸ், ஒரினாகோ, சதர்ன் சவுத் அமெரிக்கா போன்றவை நியோ டிராப்பிக்ஸ் ’ ல் அடங்கும்....

முருங்கை இலை

Image
  கொதிக்க வைத்த அல்லது காய வைத்த முருங்கை இலையில் மூன்று மடங்கு அதிகமாக உள்ள இரும்பு சத்தைக் கிரகிக்கும் தன்மையை நமது உடல் கொண்டுள்ளது.   முற்றிய முருங்கை இலையிலேயே மருத்துவக் குணம் பெருமளவு இருக்கிறது.   முருங்கை இலையை நேரடியாக வெயிலில் உலர்த்தினால் வைட்டமின் ஏ சத்து குறைந்துவிடும். நிழலில் உலர்த்தினால் 70% வைட்டமின் ஏ சத்து தங்கியிருக்கும்.   கோடைக் காலம், மழைக் காலத்தில் கிடைக்கும் முருங்கை இலையில் வைட்டமின் ஏ சத்து அதிகம்.   வறண்ட காலம், குளிர் காலத்தில் கிடைக்கும் முருங்கை இலையில் இரும்பு சத்து, வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கும். தமிழகத்தில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் கிடைக்கும் முருங்கை இலையின் சுவை அதிகம் என்பது கிராமப்புற நம்பிக்கை. இதற்கான அறிவியல் காரணம், மேலே குறிப்பிட்டதுதான்.   பரோடா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் முருங்கை இலையுடன் தக்காளியைச் சேர்த்துச் சமைத்தால் வைட்டமின் ஏ சத்து நீங்கிவிடுவதற்கான சாத்தியம் இருப்பது தெரியவந்துள்ளது. முருங்கை - மருத்துவப் பயன்கள் 1. நீரிழிவு நோய்க்கு முருங்கை இலையில் உள்ள isothiocya...

இனி என் கண்கள் எப்படி தூங்கும் ?

Image
    உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர். ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான். அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம். ஆனாலும் கணவரிடம் காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே அவை இரண்டும் என்றாராம். நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சி யாக சொன்னாராம். வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒ...